செய்திகள் :

அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: ஆக.21, 22-இல் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு போட்டி

post image

சிவகங்கை: அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற வியாழன், வெள்ளி (ஆக. 21, 22) ஆகிய இரு நாள்கள் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 21.8.2025 (வியாழன்) அன்றும், பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 22.8.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் பேச்சுப் போட்டிகள் சிவகங்கை, மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடைபெறும்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. அத்துடன் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இருவரை மட்டும் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் தலா ஒருவா் வீதம் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி நேரத்தில் குலுக்கல் முறையில் தலைப்பு ஒதுக்கீடு செய்யப்படும். அந்தத் தலைப்பிலேயே மாணவா்கள் பேச வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடம் பங்கேற்புப் படிவத்தில் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும் அல்லது 04575-241487 என்ற தொலைபேசியிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க