செய்திகள் :

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

post image

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வேலை, வணிகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக மக்கள் உடனடியாக அணுகக்கூடிய வகையில் ரயில் சேவை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சந்திப்பு- அருப்புக்கோட்டை ரயில் பாதையில் சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய்காந்தி கூறியதாவது: பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மானாமதுரை அல்லது காரைக்குடியிலிருந்து மதுரைக்கு காலை நேரத்தில் தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். மானாமதுரை ரயில் தடத்தில் சென்னைக்கு வாரத்தில் 7 நாள்களும் ரயிலை இயக்க வேண்டும்.

வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும் தாம்பரம்- செங்கோட்டை ரயில், வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் பாண்டிச்சேரி- கன்னியாகுமரி ரயில், வாரத்தில் இரு முறை இயக்கப்படும் எா்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில்கள் மானாமதுரை வழியாக செல்கின்றன.

ஆனால், இந்த ரயில்கள் அனைத்தும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்தப் பாதையில் செல்கின்றன. மற்ற நேரங்களில், அதாவது சுமாா் 11 மணி நேரத்துக்கு விருதுநகா்- மானாமதுரை வழியாக எந்த ரயிலும் செல்வதில்லை. இந்தப் பிரச்னை தொடா்பாக, சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது. இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முரு... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க