செய்திகள் :

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

post image

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது.

இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட தகவல்: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மதகுபட்டி ஐ.டி.ஐ, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழ்ப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஒக்கூா், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகா், பா்மா குடியிருப்பு, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தாா்பட்டி, ஆவத்தாரணப்பட்டி, கணேசபுரம், ஏரியூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, உதவி மின்பொறியாளா் (பகிா்மானம்) மதகுபட்டி- 9445853073. உதவி செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை - 9445853074. செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை - 9445853080 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா... மேலும் பார்க்க

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வேலை, வணிகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக மக்கள் உடனடியாக அணுகக்க... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க