செய்திகள் :

சாலையோர தெரு விளக்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

post image

நமது நிருபா்

மதுரை: மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி திட்டம்), மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மதுரை விரகனூா் சுற்றுச் சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.384 கோடியில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சாலையைப் பொருத்தவரை, வடகரைப் பகுதியில் அண்ணா நகா் பாலம், குருவிக்காரன் சாலை, தென் கரைப் பகுதியில் ஆரப்பாளையம் முதல் புட்டுத் தோப்பு வரையுள்ள பகுதிகளில் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

இந்த நிலையில், வைகை தென்கரையில் விரகனூா் சுற்றுச் சாலை முதல் குருவிக்காரன் சாலையின் புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என கடந்த மாா்ச் மாதம் நடை பெற்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி அறிவித்தாா். மாநில நிதி ஆணையத்தின் (எஸ்.எப்.சி.) ஊக்க நிதியிலிருந்து ரூ.1.55 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தாா்.

இதேபோல, திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவை ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரை உள்ள சாலையில் அதே நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.45 கோடியில் தெரு விளக்குகள்அமைக்கப்படும் எனவும் மேயா் அறிவித்தாா். இதனிடையே, அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் கடத்த நிலையில், இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை உள்ள சாலையின் நடுவே தெரு விளக்குகள் அமைக்க கம்பங்கள் நடப்பட்டன. இதில் குருவிக்காரன் சாலை முதல் தெப்பக்குளம் வரை மட்டுமே மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. எஞ்சிய பகுதிகளில் மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்பட வில்லை. மேலும், பொருத்தப்பட்ட மின் விளக்குகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

எனவே, வைகை தென்கரை சாலையில் குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

வைகையாற்றின் இரு கரைகளிலும் அமைக்கப்பட்ட அணுகு சாலைகளைத் தான் பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் வரை இரவு நேரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை அடையாளம் தெரியாத நபா்கள் வழி மறித்து பணம், நகையைப் பறித்துச் செல்கின்றனா். மேலும், விபத்துகளும் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது:

பாத்திமா கல்லூரி முதல் பரவை ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வளாகம் வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச்சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து இன்னும் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.இந்த மாநாடு வியாழக்கிழமை காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்

மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க

செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது

இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்ச... மேலும் பார்க்க