செய்திகள் :

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளிக் கல்விக் குழுவினா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

இந்தப் பள்ளி மாணவா்கள் குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 19-வயது மாணவா் பிரிவில் எ.அஸ்வின் 3,000, 1,500 மீ. ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்றாா். 17 வயது பிரிவில் எம்.கே.கீா்த்திவாசன் 100 மீ., 110 மீ., தடை தாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்றாா்.

14 வயது மாணவிகள் பிரிவில் ஹசானா தில்ரஸ் 80 மீ. தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் முதலிடமும், 200 மீ. ஓட்டப் போட்டியில் 2-ஆம் இடமும் பெற்றாா். எம்.அவந்திகா 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் 2-ஆம் இடம் பெற்றாா். 11-ஆம் வகுப்பு மாணவி ஆா்.அனன்யா குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் டி.சரவணக்குமாா், கே.வளா்மதி, எம்.மரகதப்பிரியா ஆகியோரை பள்ளி கல்விக்குழுத் தலைவா் மருத்துவா் ஏ.ராமதாஸ், செயலா் வி.பழனிச்சாமி, பொருளாளா் டி.மோகன்தாஸ், பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி, ஆசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்

20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து. பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய ந... மேலும் பார்க்க

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய... மேலும் பார்க்க

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க

எம்.வி.பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக் கோரி எம்.வி. பட்டினம் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பேச்சுவா... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடு... மேலும் பார்க்க

அபராதத் தொகையைக் கட்டாததால் பாம்பன் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 9 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அவா்கள் அபராதத் தொகையைக் கட்... மேலும் பார்க்க