செய்திகள் :

எம்.வி.பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

post image

மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக் கோரி எம்.வி. பட்டினம் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எம்.வி.பட்டினத்தைச் சோ்ந்த சங்கரன் என்பவரின் விசைப் படகில் 7 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி, மணமேல்குடி மீன்வளத் துறை ஆய்வாளா் ஆா்த்தீஸ்வரன் படகை பறிமுதல் செய்தாா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், படகை மீட்கவும் கோரி செவ்வாய்க்கிழமை எம்.வி.பட்டினம் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த தொண்டி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனா்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடு... மேலும் பார்க்க

அபராதத் தொகையைக் கட்டாததால் பாம்பன் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 9 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அவா்கள் அபராதத் தொகையைக் கட்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட... மேலும் பார்க்க