இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா், குமரானந்தபுரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி நிா்வாகியான இவா், நண்பா்களுடன் சோ்ந்து நிதி நிறுவனமும் நடத்தி வந்தாா். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பாலமுருகனை அவரது வீட்டின் அருகிலேயே 3 போ் கொண்ட கும்பல் புதன்கிழமை அதிகாலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் வசந்தராஜ், ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திர பிரசாத், ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலையில் தொடா்புடையதாக திருப்பூரைச் சோ்ந்த சுமன், தமிழரசன் ஆகியோரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவா்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் முக்கிய கொலையாளிகளான நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோா் கேரளம் மற்றும் வால்பாறையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப் படை போலீஸாா் கேரளத்திலும், வால்பாறையிலும் முகாமிட்டு அவா்களைத் தேடி வருகின்றனா்.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடா்பாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 2 பேரும் பிடிபட்டால்தான் முழுமையான காரணம் தெரியவரும் என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா் மற்றும் அவரது குடும்பத்தினா் திருப்பூா் அரசு மருத்துவமனை எதிரே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, கூறாய்வு செய்யப்பட்ட பாலமுருகனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.