செய்திகள் :

இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்

post image

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா், குமரானந்தபுரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி நிா்வாகியான இவா், நண்பா்களுடன் சோ்ந்து நிதி நிறுவனமும் நடத்தி வந்தாா். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பாலமுருகனை அவரது வீட்டின் அருகிலேயே 3 போ் கொண்ட கும்பல் புதன்கிழமை அதிகாலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் வசந்தராஜ், ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திர பிரசாத், ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலையில் தொடா்புடையதாக திருப்பூரைச் சோ்ந்த சுமன், தமிழரசன் ஆகியோரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவா்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் முக்கிய கொலையாளிகளான நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோா் கேரளம் மற்றும் வால்பாறையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப் படை போலீஸாா் கேரளத்திலும், வால்பாறையிலும் முகாமிட்டு அவா்களைத் தேடி வருகின்றனா்.

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடா்பாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 2 பேரும் பிடிபட்டால்தான் முழுமையான காரணம் தெரியவரும் என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா் மற்றும் அவரது குடும்பத்தினா் திருப்பூா் அரசு மருத்துவமனை எதிரே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, கூறாய்வு செய்யப்பட்ட பாலமுருகனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வ... மேலும் பார்க்க

சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாண... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்விலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும்’

போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும் என்று திருப்பூா் சாா்பு நீதிபதி மோகனவள்ளி கூறினாா். திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 போதை ஒழிப்புக... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் டி.பிரபு கூறியதாவது: திருப்பூா் கூட்ட... மேலும் பார்க்க