செய்திகள் :

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

post image

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் திமூர் மாவட்டத்திலுள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை, நேற்று (ஜூன் 17) மாலை சீற்றமடைந்து வெடித்தது. இதனால், இன்று (ஜூன் 18) வரை அப்பகுதியில் சுமார் 32,800 அடி உயரத்துக்கு கரும்புகைகள் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் 8 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வெளியான விடியோக்களில், இந்த எரிமலை வெடிப்பினால், சாம்பல் மற்றும் இடிபாடுகள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு அங்குள்ள பல கிராமங்களின் மீது விழுந்திருப்பது பதிவாகியுள்ளது.

எரிமலையைச் சுற்றியிருந்த கிராமங்களின் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு 12 கி.மீ. தொலைவிலுள்ள நிலெக்னோஹெங் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலையின் சாம்பல்கள் மற்றும் புகையானது விமானங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது என்பதால், பாலி நகரத்துக்கும் பல்வேறு சர்வதேச நகரங்களுக்கும் இடையிலான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலியிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, நூற்றுக்கணக்கான தீவுகளினால் உருவான இந்தோனேசியா நாட்டில் சுமார் 120 எரிமலைகள் உள்ளன. மேலும், ரிங் ஆஃப் ஃபையர் என்றழைக்கப்படும் டெக்டோனிக் தகடுகளின் மிகப் பெரியளவிலான பிளவுக்கோட்டின் மீது இந்நாடு அமைந்துள்ளதால், இயற்கை சீற்றங்களுக்கான அபாயம் என்றுமே உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

இந்தியா வர டிரம்ப்புக்கு பிரதமா் அழைப்பு

‘க்வாட்’ கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.இந்த அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ... மேலும் பார்க்க

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கேமேனி பதில்

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலை... மேலும் பார்க்க

பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவை... மேலும் பார்க்க

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க