செய்திகள் :

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

post image

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது.

இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நாள்களுக்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதில் அளித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

அனைத்து கட்சிகளும் சமம்

இதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானேஷ் குமார், "இந்திய அரசியல் சாசனத்தின் படி, இந்தியாவில் 18 வயது அடைந்த அனைவரும் வாக்காளர்கள். அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிறக்கிறது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்.

பிறகு எப்படி இந்த அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டும்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளும் சமம் ஆனது தான்.

எப்படி ஓட்டுகளைத் திருட முடியும்?

யார் எந்தக் கட்சியைச் சேர்ந்திருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியல் சாசனக் கடமையில் இருந்து பின்வாங்காது.

மக்களவை தேர்தலில், கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் ஏஜென்டுகள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் பணிபுரிந்தனர்.

இப்படியான வெளிப்படையான நடைமுறையில், இவ்வளவு மக்களுக்கு முன்பு, ஓட்டுகளைத் திருட முடியுமா?" என்று பேசியுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின்நாட... மேலும் பார்க்க

"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்கிரஸ் எதிர்வினை

ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம்.ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECIஅதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல்... மேலும் பார்க்க

மேடையில் காந்திமதி டு ராமதாஸ் - ராமதாஸ் தலைமையிலான சிறப்புப் பொதுக்குழு கூட்டம்|Photo Album

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொ... மேலும் பார்க்க

Rahul Gandhi: "இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்" - வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற... மேலும் பார்க்க

CPI: புதிய மாநிலச் செயலாளர் தேர்வு? முத்தரசன் மாற்றப்படுவாரா? - பரபரக்கும் சேலம் மாநாடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து... மேலும் பார்க்க