செய்திகள் :

``இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்'' - கல்லூரி செல்ல முடியாமல் தவித்த மாணவி; உதவிய பண்ட்

post image

கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற மாணவி உயர்கல்வியில் Bachelor of Computer Applications (BCA) படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா
ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா

ஆனால் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர் உயர்கல்வியில் சேர முடியவில்லை.

இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவி ஜோதிகா உயர் கல்வியில் சேர ரூ.40 ஆயிரம் பணத்தை ரிஷப் பண்ட் அனுப்பி இருக்கிறார்.

தொடர்ந்து மாணவி ஜோதிகா ரிஷப் பண்டிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், "நான் உயர்கல்வியில் BCA படிப்பைத் தொடர உதவி செய்த ரிஷப் பண்டிற்கு மிகவும் நன்றி கூறுகிறேன்.

ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா
ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா

மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். நான் ஒரு மென்பொருள் பொறியாளராக விரும்புகிறேன், இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Eng vs Ind: `எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை' - வைரலாகும் வாசிம் ஜாஃபரின் பதிவு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாக... மேலும் பார்க்க

ENG vs IND: 'அன்றைக்கு ரொனால்டோவின் படத்தை வால்பேப்பராக வைத்திருந்தேன்' - வெற்றி குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி ந... மேலும் பார்க்க

Siraj: ``இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன்'' - நெகிழும் சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி ந... மேலும் பார்க்க

`ஆட்டோக்கார தந்தையின் வானளாவிய கனவு; நிஜமாக்கிக் காட்டிய சிராஜ்!' - இங்கிலாந்தில் எப்படி சாதித்தார்?

'இந்தியா வெற்றி!'இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர... மேலும் பார்க்க

Siraj: வெற்றிக்குப் பின் கோலியிடமிருந்து வந்த ஸ்பெஷல் நோட்; நெகிழ்ந்த சிராஜ்; வைரலாகும் ட்வீட்ஸ்!

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற (ஜூலை 31 - ஆகஸ்ட் 4) டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது.போட்டியின் கடைசி நாளான இன்று கையில் 4 விக்கெட்டுகளுடன் 35 ரன்கள் அடித்தால் வெற்றி ... மேலும் பார்க்க

ENG vs IND: "கேப்டனின் கனவு வீரர் சிராஜ்; நாங்கள் கற்றுக்கொண்டது..." - தொடர் நாயகன் சுப்மன் கில்

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்த... மேலும் பார்க்க