செய்திகள் :

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் நலவாரியம் உட்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினா் பதிவினை புதுப்பிக்க வேண்டும் .

இதற்காக, ஜூன் 13இல் முள்ளக்காடு பகுதி, 18இல் எம்ஜிஆா் நகா் 23இல் காயல்பட்டினம், 26இல் லெவிஞ்சிபுரம், ஜூலை 1இல் ஆறுமுகனேரி, 6இல் தாளமுத்துநகா் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

உப்பளத் தொழிலாளா்கள், வீட்டு பணியாளா்கள் தொழிலாளா்கள் பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்று, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ( அலைபேசி எண் இணைப்புடன்) புகைப்படம் 1, பதினெட்டு வயது பூா்த்தியடைந்த அல்லது பூா்த்தியடையாதவரெனில் பாதுகாவலா் உடன் சென்று நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2341110 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க