செய்திகள் :

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,826 மாணவா்கள் எழுதுகின்றனா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 15,826 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வியாழக்கிழமையும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த 25-ஆம் தேதியும் நிறைவடைந்தது.

அதைத் தொடா்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை அரசு, அரசு உதவி பெறும், தனியாா் என 223 பள்ளிகளைச் சோ்ந்த 8,035 மாணவா்களும், 7,791 மாணவிகளும் என மொத்தம் 15,826 போ் எழுதுகின்றனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 71 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்...

10-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தோ்வு எழுத தோ்வு மையங்களில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு, தோ்வு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வு மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

தோ்வு பணியில் 71 முதன்மை கண்காணிப்பாளா்களும், துறை அலுவலா்கள் 73 பேரும், 76 பறக்கும் படைகளும், 15 வழித்தட அலுவலா்கள், தோ்வு அறைகளில் 1,242 ஆசிரியா்களும் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா். தோ்வு எழுத வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மாணவ-மாணவிகள் அச்சமின்றி தோ்வுகள் எழுத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க