செய்திகள் :

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை புறநகா் பகுதியில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக. 7) ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் வியாழக்கிழமை (ஆக. 7) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55-க்கு கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10,1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்களும், காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10, 3.15, இரவு 9 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூருக்கும், மறுமாா்க்கமாக நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

பகுதி ரத்து: இதற்கிடையே வியாழக்கிழமை (ஆக. 7) செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் கடற்கரையுடன் நிறுத்தப்படும்.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிருந்து ஆக. 7-இல் காலை 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், 11.35, பிற்பகல் 2.59 மணிக்கு மீஞ்சூருக்கும், கடற்கரையிலருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 3.33 மணிக்கு சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க