செய்திகள் :

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சா்கள் அஞ்சலி

post image

திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் பல்வேறு கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரனின் உருவப்படத்துக்கு, கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்வில், மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு. அன்பழகன், துறையூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்டாலின் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக: சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு, மாவட்ட செயலா் ப. குமாா் தலைமையில், கட்சியின் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல, தில்லை நகரில் உள்ள மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் கட்சியின் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.

துறையூரில்: பெரம்பலூா் எம்.பி. அலுவலகத்தில் எம்பி அருண்நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துறையூா் செ. ஸ்டாலின் குமாா் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவா் தா்மன் ராஜேந்திரன், நகரச் செயலா் ந. முரளி, நகா்மன்றத் தலைவா் செல்வராணி மலா்மன்னன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்று தியாகி இமானுவேல் சேகரனின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் மா. கலைசெல்வன் தலைமையில் அக்கட்சியினா் துறையூா் பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தினா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க