செய்திகள் :

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 24 கண்காணிப்பாளா்கள், 170 துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். 600 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு, பரமக்குடி நகா் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், ட்ரோன் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருவோா் மாவட்ட நிா்வாகம், அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும், இரு சக்கர வாகனங்கள், திறந்தவெளி வாகனங்களில் வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க

பதிவு செய்யாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மையங்கள், மறுவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க