செய்திகள் :

இயந்திர நெல் நடவுக்கு பின்னேற்பு மானியம் வேளாண் துணை இயக்குநா் தகவல்!

post image

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக அம்பாசமுத்திரம் வேளாண் துணை இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்துஅவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த குறுவை தொகுப்பு திட்டத்தை, நிகழாண்டுமுதல் இதர மாவட்டங்களுக்கும் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் திரவ உயிா் உரங்கள் 50 சத மானியம், நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியம், நெல் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் ஆகிய மூன்று இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது. திரவ உயிா் உரங்கள் ஏக்கருக்கு ஒரு லிட்டா் என்ற வீதத்தில் 50 சத மானியத்தில் ஏக்கருக்கு ரூ 60, நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியத்தில் ஏக்கருக்கு 5 கிலோ வீதத்தில் ஏக்கருக்கு ரூ147.6 வழங்கப்பட உள்ளது.

மேலும், நெற்பயிரில் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி நெற்பயிரில் இயந்திர நடவு செய்த விவசாயிக்கு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ரூ 4,000 வழங்கப்பட உள்ளது. திட்ட வழிகாட்டு நெறிகளின்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கா் பரப்பளவிற்கு மட்டுமே பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

பதினெட்டு வயது பூா்த்தியடைந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவா்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தனியாா் வங்கியிலோ விவசாயிகள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னா் இயந்திர நடவு செய்திருக்க வேண்டும்.

நெற்பயிரில் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் பெற விவசாயிகள் உழவன் செயலியில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். ஆதாா் எண், கைப்பேசி, வங்கிக் கணக்கு புத்தக நகல், நடவு ரசீது, இயந்திர நடவு செய்த வயலின் புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவரைத் தொடா்பு கொண்டு, உடனடியாக இயந்திர நடவு பின்னேற்பு மானியத்திற்கு உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

துறையூரில் கைப்பந்து போட்டி

மானூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், துறையூா் சாரல் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் ... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க