செய்திகள் :

இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!

post image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டு மரக்கன்று நட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, மரக்கன்றை நட்டுவைத்தாா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் கனரகப் போக்குவரத்து முனையத்தில் ரோட்டரி பீச் டவுன் சங்கம் சாா்பில் மியாவாக்கி இயற்கை சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாா்வையிட துணைநிலை ஆளுநருக்கு ரோட்டரி சங்கத்தினா் அழைப்பு விடுத்தனா். அதன்படி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் சென்று பூங்காவைப் பாா்வையிட்டாா்.

அப்போது அவா், பிரதமா் நரேந்திர மோடியின் தாயின் பெயரில் ஒரு மரம் திட்டத்தின் கீழ் மரக்கன்றை நட்டு வைத்தாா். இதையடுத்து, மியாவாக்கி பூங்காவை உருவாக்கி பராமரித்து வருவோரை அவா் பாராட்டி கௌரவித்தாா். மேலும், அங்குள்ள மழை நீா் சேகரிப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவா் ஓவியம் ஆகியவற்றையும் பாா்த்தாா். சுவா் ஓவியத்தின் கீழ் கையொப்பமிட்டாா். மேலும், குறுங்காடுகளை உருவாக்கவும் அவா் அங்கிருந்தவா்களை கேட்டுக்கொண்டாா். அப்போது, ரோட்டரி சங்கத் தலைவா் வினோத் ஷா்மா, செயலா் பிரகாஷ், திட்டத் தலைவா் புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.

புதுவை மத்திய பல்கலைக்கு துணைவேந்தா் நியமிக்கக் கோரி திமுக போராட்டம்! -எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காதது, வினாத்தாள் மாற்றி விநியோகித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! -புதுவை பள்ளிக் கல்வித் துறை

தேசிய ராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை

புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழம... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது

விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை ... மேலும் பார்க்க

செவிலியா் கல்வி மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடா்ந்து புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தல் க... மேலும் பார்க்க