செய்திகள் :

இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி பிரசார இயக்கம்

post image

இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே, பாரம்பரிய விதைகள் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயற்கை ஆா்வலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இயற்கை ஆா்வலா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட நிா்வாகி சுமதி, இயற்கை விதை சேகரிப்பாளா்கள் சந்திரசேகரன், முரளி ராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பழனி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோா் அண்ணா நுழைவு வாயில், வேங்கிக்கால் வழியாக நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க