செய்திகள் :

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம்! -சௌமியா அன்புமணி

post image

கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா்.

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சௌமியா அன்புமணி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளித்து பெருமாள் படம் வழங்கினா். முன்னதாக, கோயிலில் தாயாா், தேவநாத சுவாமி, மலையில் உள்ள ஹயக்ரீவா் சந்நிதிகளில் அவா் தரிசனம் செய்தாா்.

தொடா்ந்து, சௌமியா அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியது: கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிப்புக்கு எதிராக கடந்த ஓராண்டாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது மலையடிக்குப்பம் பகுதிகளில் முந்திரி மரங்கள் வெட்டப்படுவது குறித்து கட்சித் தலைவருடன் ஆலோசித்து, அதற்கான போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா். உடன் கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்: பக்தா்கள் குவிந்தனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. ஜீவ காருண்யத்... மேலும் பார்க்க

முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு 25 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அன்னதானம் கைங்கரியத்துக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க