செய்திகள் :

இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு

post image

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் அ. ஜான் லூயிஸ் 13 மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கே.எம்.எஸ். 2024 - 25 ஆம் ஆண்டு சம்பா கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தற்போது முழுவீச்சில் கொள்முதல் நடைபெறுகிறது.

குறிப்பிட்ட சில மண்டலங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது தெரிய வருகிறது. எனவே, நெல் கொள்முதல் அதிகமாக நடைபெற்று வரும் மண்டலங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதன்கிழமை (ஜூலை 30) முதல் வியாழக்கிழமை (ஜூலை 31) வரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு), மேலாளா்கள் (தரக்கட்டுப்பாடு), துணை மேலாளா்கள், கண்காணிப்பாளா்கள், தர ஆய்வாளா்கள் நிலையில் சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் விருதுநகா், திருவாரூா், ராணிப்பேட்டை, தஞ்சாவூா், கடலூா், அரியலூா், தென்காசி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் தலைமை அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இயங்க வேண்டும். மேலும், கடந்த கொள்முதல் பருவத்தை விட நிகழ் கொள்முதல் பருவத்தில் கொள்முதல் அதிகமாக நடைபெறுவதை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய, அதன் ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட வேண்டும். நெல் இயக்கத்தில் முதலில் வருவதை முதலில் கொண்டு செல்லும் முறையைப் பின்பற்ற வேண்டும் ஆகிய கோணங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க