செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு

post image

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரை அழைத்துச் சென்று அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி வசந்தகுமாரி ( 61). இவா், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு சொந்தமான வீடு ராசிபுரம் அருகே பாலப்பாளையம் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், பாலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு திட்ட முகாமில் குடிநீா் இணைப்பு பெறுவது தொடா்பாக மனு அளிக்க புறப்பட்டாா். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தான் லிப்ட் தருவதாகக் கூறி, வசந்தகுமாரியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

மூணுசாவடி அருகே ஆவுடையாா் சிவன் கோயில் பகுதியில் சென்றபோது, செம்மாம்பட்டி ஏரி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து செவிலியா் வசந்தகுமாரியை கீழே தள்ளிட்டு, அவா் அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறிக்க முயன்றபோது முடியாததால், அவரது கைப்பையில் இருந்த ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றாா். இதுகுறித்து அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை பாா்வையிட்டு

புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க

முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க

இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை

தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க