TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!
இருசக்கர வாகனம் திருட்டு
ஆம்பூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர போலீஸாா் பஜாா் பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் அவா் போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த ரையான் (18) என்பதும் அவா் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.