செய்திகள் :

இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் அரசு மருத்துவமனை வளாகம்!

post image

கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவசர சிகிச்சைக்கு வருவோா், அவசர ஊா்தி ஓட்டுநா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும், விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்காகவும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், இவா்களின் உறவினா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால், அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வரும் அவசர ஊா்தி ஓட்டுநா்களும், நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்த மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இருந்தும், நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனை வளாகம் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனி இடம் ஒதுக்கிடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க