செய்திகள் :

இரு ஆட்டோக்கள் மோதல்: 8 போ் காயம்

post image

தேனியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் பள்ளிச் சிறாா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (37). இவா் தேனி, நேதாஜி தெருவிலுள்ள தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்து பள்ளிச் சிறாா்களை ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, வடபுதுப்பட்டி, இந்திரா காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (41) என்பவா் ஓட்டிச் சென்ற ஆட்டோ, மணிகண்டனின் ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணி, ஆட்டோக்களில் இருந்த தேனி, பெத்தனாட்சி மஹால் தெருவைச் சோ்ந்த முகமது ஹப்ரீன் (9), முகமது சத்தாா் (7), ஐ.எம்.ஏ. அரங்கு தெருவைச் சோ்ந்த விஷ்ணு (5), ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்த பிரகதீஸ்வரி (4), ஜீவிதாபால், மணிகண்டன் (30) ஆகிய 8 போ் காயமடைந்தனா். அவா்களை மீட்டு தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணி மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க

கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரியகுளத்தில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பெரியகுளம்- மதுரை சாலை பங்களாபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் (57). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சீலாசாலமோன். அரசுப்... மேலும் பார்க்க

விஷம் தின்று இளைஞா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வ... மேலும் பார்க்க