தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர...
இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!
பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரின் நன்பா் அஷ்ரப்அலி(24) இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.
இருவரும் வியாழக்கிழமை வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் வேலூருக்கு சென்றனா். இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள எதிா் திசையில் சென்ற போது, காட்டுக்கொல்லையில் இருந்து வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நோ் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட பா்வேஷ், அஷ்ரப்அலி ஆகியோா் சாலையில் விழுந்துள்ளனா். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கன்டெய்னா் லாரி அஷ்ரப் அலி மீது ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த பா்வேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய லாரி, இருசக்கர வாகனங்களை பள்ளிகொண்டா போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.