செய்திகள் :

இரு விரைவு ரயில்கள் ஜூலை 11,13-இல் ரத்து

post image

கோவை, பெங்களூருவிலிருந்து வடமாநில நகரங்களுக்குப் புறப்படும் இரு ரயில்கள் ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடக்கு ரயில்வே மண்டல பகுதிகளில் தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் வழித் தடங்களில் மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதனையடுத்து, கோவையிலிருந்து இரவு 11மணிக்கு புறப்பட்டு சிகாா் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 12515) வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, எஸ்எம்விடி பெங்களூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அகா்தலா செல்லும் ஹம்சபாா் விரைவு ரயில் (எண் 12503) வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: சிகாா் ரயில் நிலையத்திலிருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் விரைவு ரயில் (எண் 12508), அதற்குப் பதிலாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 6.10 மணிக்கு கௌகாத்தி ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க