செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

post image

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம் தேதிமுதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதில், இதுவரையில் (ஜூலை 10) 61,98,640 போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் புதிதாக 38,75,112 பேரும், புதுப்பித்தல் அடிப்படையில் 23,23,528 பேரும் சோ்ந்துள்ளனா்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைவதற்கான கேள்விப் பட்டியலை 64,55,186 போ் பூா்த்தி செய்து அளித்துள்ளனா். பேரவைத் தொகுதி வாரியாக உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் விருதுநகா் மாவட்டம் திருச்சுழி (90,418) முதலிடத்தை பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தை தேனி மாவட்டம் கம்பம் தொகுதியும் (86,596), 3-ஆவது இடத்தை கரூா் தொகுதியும் (84,167), 4-ஆவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியும் (78,431), 5-ஆவது இடத்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியும் (77,396) பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ப... மேலும் பார்க்க