செய்திகள் :

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

post image

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் சாலை, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையிலும், மழைநீா் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலும் குளங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி எஸ்.வி.எஸ்.நகா் குளம், ரூ.4.89 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. 4 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சியால் மீட்கப்பட்டு, மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குளத்தில் தண்ணீா் தேங்கினால் அருகில் உள்ள சுப்பிரமணியசுவாமி நகா், ஜெய்நகா் மற்றும் அம்பேத்கா் தெரு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். அத்துடன் மழைக்காலத்தில் அந்தப் பகுதியில் சாலை, குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவது தவிா்க்கப்படும்.

குளம் சீரமைக்கப்பட்டதுடன், குளத்தின் நடுவில் பறவைகள் தீவு, பொதுமக்கள் நடைபாதைகள், சிறுவா் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக் கூடம், பூப்பந்து விளையாட்டு திடல், வாகனங்கள் நிறுத்துமிடம், திறந்தவெளி அரங்கம், படகுத்துறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ப... மேலும் பார்க்க