செய்திகள் :

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

post image

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது.

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த வாகனங்களை ஏலம் விடுவதற்கு நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் எதுவும் காவல் துறைக்கு இல்லாமல் இருந்தது. இதனால் போதைப் பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலம் விடுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு அண்மையில் அந்த நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி வழங்கியது. தொடா்ந்து, மாநிலம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 4,262 இரு சக்கர வாகனங்கள், 293 ஆட்டோக்கள், 719 காா்கள், வேன்கள், 64 கனரக வாகனங்கள், 18 படகுகள் என மொத்தம் 5,356 வாகனங்களை ஏலம் விடும்படி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதற்காக அந்தந்த சரக டிஐஜி தலைமையில் குழு அமைத்து, நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுஏல முறையில் வாகனங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநிலம் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் ஏலம் விடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ப... மேலும் பார்க்க