செய்திகள் :

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த மே 22-ஆம் தேதி மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவருக்கும் அங்கு மது அருந்திக்கொண்டிருந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காயமடைந்த வெங்கட்குமாா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனா்.

குறிப்பாக, மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி தி.பிரசாத், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ரா.கணேஷ்குமாா், சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த க.தனசேகா், பனையூரைச் சோ்ந்த து.அஜய்ரோகன், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த வி.நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் திரை பிரபலங்களுக்கு கொகைனை அந்த கும்பல் விற்பது தெரியவந்தது. இதுதொடா்பாக நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், மதுபானக் கூட மோதல் வழக்கில் தலைமறைவாக இருந்த தியாகராய நகரைச் சோ்ந்த சரண் நிவாஸ் (27) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ப... மேலும் பார்க்க