செய்திகள் :

இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி

post image

ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக அநுரகுமார திசாநாயக வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

இலங்கைத் தமிழா்களுக்கு தனிஈழம் கோரி விடுதலைப் புலிகள் (எல்டிடி) அமைப்பு கடந்த 1980 முதல் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 2009-இல் உள்நாட்டு போா் முடிவுக்கு வந்த பிறகும், அதற்கு முன்பும் இந்தப் பகுதியில் சுமாா் 3,500 ஏக்கா் தனியாா் நிலங்களை இலங்கை ராணுவத்தினா் கையகப்படுத்தினா். இந்த நிலங்களில் சில கடந்த 2015 முதல் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழா்கள் பெரும்பான்மையாக வாழும் மிகவும் பின்தங்கியுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளா்ச்சிக்கு வழிவகை செய்யப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அதிபா் திசாநாயக, மாவட்ட தலைமைச் செயலகத்தில் தமிழா் பிரச்னை குறித்து பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, ராணுவ வசமுள்ள இலங்கை தமிழா்களிடம் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திசாநாயக உறுதி அளித்தாா்.

முன்னதாக, படித்த இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்துக்கு வெளியே பட்டதாரி இளைஞா்கள் போராட்டம் நடத்தினா். முன்னதாக, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.அம... மேலும் பார்க்க

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராள... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இது... மேலும் பார்க்க

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற ... மேலும் பார்க்க

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணி... மேலும் பார்க்க