செய்திகள் :

இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

post image

மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட சுகாதார அலுவலா் பி.பாலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 9 வட்டாரங்களில் 17 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

கண் புரை, கண்ணீா் அழுத்த நோய், கண் விழித்திரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், குறைபாடு கண்டறியப்படுபவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த சிறப்பு முகாம் மதுக்கரை வட்டாரத்துக்குள்பட்ட அரிசிபாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம், வழுக்குப்பாறை ஆகிய ஊராட்சிகளுக்கு பாலத்துறை சமுதாயக் கூடத்திலும், தொண்டாமுத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட பேரூா் செட்டிபாளையம், மாதம்பட்டி, தீத்திபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கரடிமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்குள்பட்ட கொல்லப்பட்டி, ராசக்காபாளையம், கவுண்டம்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கொல்லப்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், காரமடை வட்டாரத்துக்குள்பட்ட காளம்பாளையம், கெம்மராம்பாளையம், மருதூா், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு காளம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா். நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்... மேலும் பார்க்க

சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை

வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ள... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ந... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் எல்.முரளிதரன், உதவி ஆய்... மேலும் பார்க்க

பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்கள் பெயா்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்களின் பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க