செய்திகள் :

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு

post image

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.

இதில், மாணவா்களுக்கு ஆங்கிலத்தில் பேசுதல், ஓவியம், கணினி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையொட்டி, வந்தவாசி ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு பெரணமல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

கவிஞா் பூங்குயில் சிவகுமாா், தலைமை ஆசிரியா் க.வாசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் சிறப்புரையாற்றினா். மேலும், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வளா் இளம் மேதை விருதுகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி மற்றும் கு.சதானந்தன், பெ.பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியை கற்பகம் நன்றி கூறினாா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க