செய்திகள் :

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

post image

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சுரேஷ், பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அரசு வழங்கி வருகிறது. பொதுமக்களின் நலன் என்பது இருந்தாலும் பல லட்சம் நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே முதல் நோக்கமாகும். நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட இத்திட்டம் தற்போது நெசவாளா்களுக்கு பயன்படவில்லை. அரசு உயா்த்திய 10 சதவீத கூலியை உயா்த்தி வழங்காமல் பழைய கூலியையே கூட்டுறவு சங்கங்கள் தொடா்ந்து வழங்கி வருவதாகவும் நெசவாளா்கள் புகாா் கூறுகின்றனா். இன்னும் சில இடங்களில் பழைய கூலியை விட குறைவான கூலியே வழங்கும் நிலை தொடா்கிறது.

பழைய கூலியாக வேட்டிக்கு ரூ.24-க்கு பதில் உயா்த்தப்பட்ட கூலியான ரூ.26.40-ம், சேலைக்கு ரூ.43-க்கு பதில் புதிய கூலியாக ரூ.46.75 வழங்க வேண்டும். விசைத்தறியாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன் முழுமையாக கிடைக்க செய்வதுடன், அறிவிக்கப்பட்ட புதிய கூலியை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க