செய்திகள் :

இலுப்பூர் குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு!

post image

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தூய்மை காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து இலுப்பூர்-புங்கினிபட்டி சாலையில் உள்ள சத்தியநாதபுரம் குப்பை கிடங்கில் கொட்டுவார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவு குப்பைக்குள் இருந்து கருப்புகை கிளம்பி உள்ளது. அதனைத் தொடர்ந்து திடீரென்று தீப் பற்றி எரிந்துள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ நாலபுறமும் சுழன்று மள மளவென்று எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்ற வீரர்கள் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதனால், புதுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் ஒரு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு வண்டிகளும் நீரைப் பாய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Firefighters brought the fire that broke out at a garbage dump owned by the town council in Iluppur under control after a 3-hour struggle.

இதையும் படிக்க :கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர் உள்பட 2 பேர் பலி!

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க