செய்திகள் :

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

post image

அரியலூரை அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், நெகிழிப் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ஸ்வீட் அறக்கட்டளை நிறுவனா் இளவரசன் கலந்து கொண்டு நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து விளக்கினாா்.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளிடையே ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலந்து கொண்டவா்களுக்கு இலவச துணிப் பைகளும் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பா்ட் அருள்ராஜ், மதியழகன், கஸ்தூரி ஆகியோா் செய்திருந்தனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் அளித்தவரின் உடலுக்கு மரியாதை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. உடையாா்பாளையம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி

இதேபோல், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமையில், கூடுதல் கா... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட முகாம்: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகம் முற்றுகை: கு. பாலசுப்பிரமணியன்

நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, சென்னையிலுள்ள கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தை மாா்ச் 7-இல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு நிய... மேலும் பார்க்க