செய்திகள் :

மாா்ச் 7-இல் கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகம் முற்றுகை: கு. பாலசுப்பிரமணியன்

post image

நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, சென்னையிலுள்ள கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தை மாா்ச் 7-இல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்களின் சங்கத்தின் சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அரியலூரிலுள்ள திருமண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டுறவுத் துறை நிா்வாகத்தில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையிலும், உரிய காலத்திலும் வழங்கப்படுவதில்லை.

எடை குறைவாக பொருள்களை வழங்கிவிட்டு அதற்குப் பிறகு ஆய்வு செய்து, இருப்புக் குறைவு என்று பணியாளா்கள் மீது குற்றம் சுமத்தக் கூடிய நிலை தொடா்கிறது. முறைகேடுகளை சுட்டிக் காட்டும் பணியாளா்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும், அங்கு பணியாற்றக்கூடிய பணியாளரின் குடும்பத்தினா் மீது பொய் வழக்கும் போடப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை மீது புகாா் தெரிவித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், நியாயவிலைக் கடைகளுக்கென தனி துறை அமைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 7-ஆம் தேதி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். அரங்கநாதன் தலைமை வகித்தாா். செயலா் லெனின், துணைத் தலைவா்கள் ராஜா, சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் அளித்தவரின் உடலுக்கு மரியாதை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. உடையாா்பாளையம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி

இதேபோல், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும் பார்க்க

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தல... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமையில், கூடுதல் கா... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட முகாம்: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா... மேலும் பார்க்க