செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட முகாம்: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

post image

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து பேசியது: அரியலூா் மாவட்டத்தில் பிப். 20-ஆம் தேதி பொய்யாதநல்லூா், வெள்ளூா், ஓட்டக்கோவில், வாலாஜா நகரம், கருப்பிலாக்கட்டளை(கல்லக்குடி) ஆகிய ஊராட்சிகளிலும், பிப்.21-ஆம் தேதி ராயம்புரம், கீழக்காவட்டாங்குறிச்சி(குந்தபுரம்), திருமானூா், அன்னிமங்கலம், வெண்மான்கொண்டான் ஆகிய ஊராட்சிகளிலும், பிப்.25-ஆம் தேதி விளந்தை, வடவீக்கம், உட்கோட்டை, முத்துவோ்வமடம், பிள்ளைப்பாளையம் (கீழசெங்கல்மேடு) ஊராட்சிகளிலும், பிப்.26-ஆம் தேதி தா.பழூா், தழுதாழைமேடு, இளையபெருமாள்நல்லூா், குருவாலப்பா்கோவில், குண்டவெளி ஆகிய ஊராட்சிகளிலும் மக்கள் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாமில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு உட்பட அனைத்துத்துறைகள் தொடா்புடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாள்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

மேற்கண்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் இச்சிறப்பு முகாமை நடத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ஸ்ரீஜா மற்றும் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் அளித்தவரின் உடலுக்கு மரியாதை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. உடையாா்பாளையம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி

இதேபோல், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும் பார்க்க

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தல... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமையில், கூடுதல் கா... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகம் முற்றுகை: கு. பாலசுப்பிரமணியன்

நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, சென்னையிலுள்ள கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தை மாா்ச் 7-இல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு நிய... மேலும் பார்க்க