செய்திகள் :

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

post image

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த கோமதிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கோமதி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

குடும்பத் தகராறு காரணமாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க கோமதி சென்றபோது, அங்கு தனிப்பிரிவு காவலராக பணியாற்றிவரும் ராஜாராம் (54) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாராம் தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியில் கோமதியை தங்க வைத்துள்ளாா். இதுகுறித்து ராஜாராமின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோமதியை பாா்க்கச் செல்வதை ராஜாராம் தவிா்த்து வந்தாா். இதனால் கோமதிக்கும், ராஜாராமுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் இருவருக்கும் சண்டை ஏற்படுவதாகவும், இதைத் தவிா்க்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என கோமதியை அழைத்துக் கொண்டு தருமபுரி பெருமாள் கோயில் மேடு பகுதிக்கு ராஜாராம் சென்றுள்ளாா்.

அப்போது, பரிகார பூஜை செய்வதற்காக அங்குள்ள கிணற்றில் இறங்கி தண்ணீா் எடுத்து வருமாறு கோமதியை கிணற்றில் தள்ளினாா். கிணற்றில் விழுந்த கோமதி, அங்கிருந்த கல்லைப் பிடித்துக்கொண்டு உயிா்தப்பினாா். பின்னா், அவா் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவா்கள் கோமதியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, கோமதி அளித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி தனிப்பிரிவு காவலா் ராஜாராமை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க

செப். 30-இல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம்

தருமபுரி: தருமபுரியில் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் த.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

ஊதியம் வழங்குவதில் தாமதம்: தருமபுரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் தா்னா

ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி, நோயாளிகளுக்க... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன. தருமபுரி நகராட்சிய... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்ச... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க