செய்திகள் :

இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

post image

குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி எரிந்த நிலையில் மனித சடலம் அடங்கிய சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்ட சிலர், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சூட்கேஸிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம், சுமார் 20 - 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரது எனத் தெரிய வந்தது.

இதையடுத்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த சடலம், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், குற்றவாளியை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

காவல் துறை துரிதமாகச் செயல்பட்டு மேற்கொண்ட தீவிர விசாரணையில், காஸியாபாத்தின் கோரா காலனியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர்களான அமித் திவாரியும் அனுஜ் குமாரும் சம்பவ இடத்திற்கு காரில் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, கால் டாக்ஸி ஓட்டுநரான அமித் திவாரியை கைது செய்த காவல் துறை அவரிடம் விசாரித்ததில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கொல்லப்பட்டவர் 23 வயது ஷில்பா பாண்டே என்பது தெரிய வந்துள்ளது. இவர் அமித் திவாரியின் தந்தை வழி உறவு முறையில் அவருடைய முறைப்பெண் ஆவார்.

சூரத்திலுள்ள தன் வீட்டிலிருந்து கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியேறிய ஷில்பா பாண்டே, தற்போது கைதாகியுள்ள அமித் திவாரியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அமித் திவாரிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதால், அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தன்னுடன் தனியாகக் குடித்தனம் நடத்த ஷில்பா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இல்லையெனில், தங்கள் இருவருக்குமிடையிலான உறவு குறித்து அவரது குடும்பத்திடம் தெரிவித்துவிடுவதாகவும் ஷில்பா மிரட்டியதாக அமித் திவாரி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று இரவு மது போதையில் இருந்த அமித் திவாரியுடன் ஷில்பா தகராறு செய்த நிலையில், அவரை தனது கையால் அடித்து மயக்கமடையச் செய்த திவாரி, அதன்பின் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தனது நண்பரான அனுஜ் குமாரை வீட்டிற்கு வரவழைத்து, அவர் உதவியுடன் இரவு 9 மணியிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு வரை இருவரும் காரில் சடலத்தை ஏற்றிக் கொண்டு மறைவான இடத்தில் அந்த உடலை வீசிச் செல்ல சுற்றித் திரிந்துள்ளனர்.

குடியரசு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சாலைகளில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததால் பதற்றமடைந்த இருவரும், ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கிக்கொண்டு தங்களிடமிருந்த பெரிய சூட்கேஸில் அந்த பெண்ணின் உடலை அடைத்து அதன்பின் காஸிபூர் காகித மண்டி பகுதியருகே சென்று அங்கே சூட்கேஸை சுற்றி வைக்கோலை பரப்பி, பின் சூட்கேஸை எரித்துள்ளனர்.

இந்த நிலையில், சூரத்திலுள்ள உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எ... மேலும் பார்க்க

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க