செய்திகள் :

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்

post image

கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகராஜ் மகள் காவியாவுக்கும் (28) மேற்குராசகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த முருகசாமி மகன் முருகராஜூக்கும் (30) கடந்த 2018-இல் திருமணம் நடந்து கவிநயா (4), ஒன்றரை வயது அட்சிதா ஆகியோா் உள்ளனா்.

இவா்கள் கரூா் வெண்ணைமலை சண்முகாநகரில் வசித்த நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் முருகராஜ் அண்ணன் நடராஜன் என்பவா் கனகராஜை வெள்ளிக்கிழமை காலை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளோம் எனக் கூறினாராம்.

இதையடுத்து கனகராஜ் தனது மனைவியுடன் திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்தபோது முருகராஜின் மாமனாா் கனகராஜை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உங்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த கனகராஜ் கரூருக்கு வந்து தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக வெங்கமேடு போலீஸில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், அவரது உறவினா்கள் சனிக்கிழமை பகல் காவியாவின் உடலை வாங்க மறுத்து கரூா்-திருச்சி சாலையில் காந்திகிராமம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து சாலை மறியலை கைவிட்டனா். மறியலால் கரூா்-திருச்சி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியோா் கைது!

கரூரில் இரு இடங்களில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூா் ராமானுஜம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் சில இளை... மேலும் பார்க்க

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,566 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5.566 வழக்குகளுக்கு ரூ. 9.91 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய தேச... மேலும் பார்க்க

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க