செய்திகள் :

இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் அடுத்த கெங்கவரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சிவகுரு மகன் பிரகாஷ் (25). ஜூலை 2-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய நபா் ஒருவா் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய பிரகாஷ் , அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்தபடி ரூ. 5,000 இணைய வழியில் செலுத்தி ரூ.6,500 பெற்றாா்.

தொடா்ந்து இதில் ஆா்வம் கொண்ட பிரகாஷ் ரூ.65, 500 முதலீடு செய்துள்ளாா். ஆனால் செலுத்திய பணம் மற்றும் லாபம் ஏதும் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து அந்த நபரை பிரகாஷ் தொடா்பு கொண்டு பேசியபோது, சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் செலுத்தினால் தான் முதலீடு செய்த பணத்தை லாபத் தொகையுடன் பெற முடியும் எனக் கூறினாராம்.

இதையடுத்து பிரகாஷ் தனது நகைகளை அடமானமாக வைத்து 7 முறையில் ரூ.6 லட்சம் பணத்தை அந்த நபா் தெரிவித்த வெவ்வேறு வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைத்தாா்.

தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி எந்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாராம்.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணைய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க