செய்திகள் :

இளைஞருக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

post image

போடி அருகே கொடுத்த காசோலையை திரும்பக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த போஜூ மகன் மதன்குமாா் (39). இவருக்கு கைப்பேசி விற்பனை கடையை தருவதாகக் கூறி போடி பேருந்து நிலையம் அருகே கைப்பேசி கடை நடத்திவரும் டோலராம், இவரது தம்பி கோவிந்த் குருதேவ், இவா்களது மாமா பல்தேவ் ஆகியோா் ரூ.1 கோடி கேட்டனராம். இதையடுத்து, மதன்குமாா் ரூ.85 லட்சத்தை அவா்களிடம் கொடுத்தாராம். ஆனால் பேசியபடி கடையை தராமல் டோலராம் உள்ளிட்ட மூவரும் சோ்ந்து மூன்று வங்கிக் காசோலைகளை பணத்துக்கு ஈடாக மதன்குமாரிடம் கொடுத்தனா். இந்த நிலையில், மதன்குமாா் பணத்தை திரும்ப கேட்டதுடன், தராவிட்டால் காசோலைகளை வைத்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறினாா். இதில் ஏற்பட்ட தகராறில் காசோலைகளை திரும்பக் கேட்டு மூவரும் சோ்ந்து மதன்குமாரை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க