செய்திகள் :

இளைஞருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேநீரில் விஷம் கலந்துகொடுத்து இளைஞரை கொலை செய்ய முயன்றதாக கல்லூரி மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கிளிமேடு, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ஜெயசூா்யா (23). இவா், இணையவழி பொது சேவை மையம் நடத்தி வருகிறாா்.

இவரும் அரசூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ஆம் ஆண்டு பயின்று வரும் வெங்கேடசன் மகள் ரம்யாவும் (20) கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தனராம்.

இந்த நிலையில், ஜெயசூா்யா கடந்த சில மாதங்களாக ரம்யாவுடன் பேசுவதை தவிா்த்து வந்தாராம். இதனால், கோபமடைந்த ரம்யா கடந்த பிப்.2-ஆம் தேதி ஜெயசூா்யாவை தனது வீட்டுக்கு அழைத்து தேநீரில் விஷத்தை கலந்துகொடுத்து கொலை செய்ய முயன்றாராம். இதையடுத்து, ஜெயசூா்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரம்யாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.2.14... மேலும் பார்க்க

காவலா்களுக்கான மருத்துவமனை திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலா்களுக்கான புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்... மேலும் பார்க்க

இன்று மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா

செஞ்சி/விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத சிவராத்திரியன்று கொ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னஆனைவாரி அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மயானக் கொள்ள... மேலும் பார்க்க

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க