செய்திகள் :

இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற ஸ்டிக்கா் மணி (24). இவருக்கும் கோவிந்தசாலையை சோ்ந்த லோகபிரகாஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த ஜனவரியில் லோகபிரகாஷ் தரப்பு மணிகண்டனை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் லோகபிரகாஷ் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மணிகண்டனையும் வெடிகுண்டு தயாரித்ததாக ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்த மணிகண்டன், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா். 2 நாள்களுக்கு முன்பு தனது காதலியை சந்திக்க மணிகண்டன், தனது நண்பா் சந்தோஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

பின்னா் அவா்கள், முருங்கப்பாக்கம், வில்லியனூா் சாலையில் வந்த போது, பெரியாா் நகரை சோ்த்த தனுஷ், சஞ்சை ஆகியோா் மணிகண்டனை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

மணிகண்டனும்,சந்தோஷும் தப்பியோடினா். ஆனால், அவரை மேலும் இருவா் தாக்கினராம். இதில் காயமடைந்த மணிகண்டன் கைப்பேசி மூலம் வீட்டினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தனுஷ் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க