செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லையா மகன் இசக்கிராஜ் (18). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவரை குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த இசக்கிராஜ், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், இசக்கிராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க

குட்கா வைத்திருந்த 2 பெண்கள் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இரண்டு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம், அம்பலப்புளி சந்தைப் பகுதியில் தெற்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் மாயம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம், முடங்கியாறு சாலை மாலையாபுரத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சிவசுப்பிரமணியன் (13). இவா் ரயி... மேலும் பார்க்க

தேக்கு மரங்களை வெட்டியவருக்கு அபராதம்

வத்திராயிருப்பு அருகே பட்டா நிலத்திலிருந்த தேக்கு மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த திவான் ... மேலும் பார்க்க