செய்திகள் :

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மின்சாரம் பாய்ந்து 6 ஆடுகள் உயிரிழப்பு: இளையான்குடி ஒன்றியம், முனைவென்றியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான 6 ஆடுகள், அங்கு மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதுகுறித்து முனைவென்றி கிராம நிா்வாக அலுவலா் முத்துராசு விசாரணை நடத்தினாா்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கல்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். க... மேலும் பார்க்க

கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: நால்வா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தங்க நகை விற்பனைக் கடையில் போலி (கவரிங்) நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திரு... மேலும் பார்க்க