செய்திகள் :

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

post image

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த, இருதரப்புக்கும் இடையில் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையானது கடந்த சில மணி நேரங்களாகத் தீவிரமடைந்துள்ளதாக, ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

“போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் எங்கள் சகோதரர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகியோருடனான எங்களது தொடர்பு நிறுத்தப்படவில்லை, கடந்த சில மணிநேரங்களாக அது தீவிரமடைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், போர்நிறுத்தத்துக்கான எந்தவொரு புதிய ஒப்பந்தத் திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை: டிரம்ப்

ஈரானுடன் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 25) தெரிவித்தார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், தடைபட்டிருந்த பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்..அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர் டிரம்ப்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதி... மேலும் பார்க்க

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்... மேலும் பார்க்க

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடை... மேலும் பார்க்க

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட... மேலும் பார்க்க