கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தந்தையின் வலி! - மகளுக்கு ஒரு மடல் #உ...
இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!
காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த, இருதரப்புக்கும் இடையில் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையானது கடந்த சில மணி நேரங்களாகத் தீவிரமடைந்துள்ளதாக, ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
“போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் எங்கள் சகோதரர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகியோருடனான எங்களது தொடர்பு நிறுத்தப்படவில்லை, கடந்த சில மணிநேரங்களாக அது தீவிரமடைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், போர்நிறுத்தத்துக்கான எந்தவொரு புதிய ஒப்பந்தத் திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?