செய்திகள் :

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

post image

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஈமு கோழி மோசடி

அந்த வகையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கினார்.

அந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், தீவனம், கொட்டகை அமைத்து தரப்படும். இதற்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதுடன், ரூ.20,000 போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஈமு கோழி மோசடி
ஈமு கோழி மோசடி
ஈமு கோழி மோசடி

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டிய பணம் முழுவதுமாக திரும்பி வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தார். இதை நம்பி அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர்.

ஆனால் சொன்னபடி பணம் வழங்காமல் மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்டியப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து குருசாமியை கைது செய்திருந்தனர்.

ஈமு கோழி மோசடி குருசாமி

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..! தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து

"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: ``அறிவியல் பூர்வமாக ஆய்வு... சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல'' -தமிழக அரசு விளக்கம்!

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செ... மேலும் பார்க்க