செய்திகள் :

ஈரானில் எச்சரிக்கையுடன் செயல்பட இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

post image

‘இஸ்ரேலுடன் போா்ப் பதற்றம் நிலவுவதால், ஈரானில் உள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரானில் அனைத்து இந்தியா்களும் இந்திய வம்சாவளியினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிா்ப்பதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய தூதரகத்துடன் தொடா்பை வைத்திருப்பது அவசியம்.

உள்ளூா் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், இந்தியா்கள் தங்களின் விவரங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். பீதி அடைய தேவையில்லை என்றபோதும், விழிப்புடன் செயலாற்றுவது முக்கியம் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 98 9128109115, 98 9128109109 (தொலைபேசி அழைப்புகள் மட்டும்), 98 9015993320, 91 8086871709 (வாட்ஸ் ஆப்) உள்ளிட்ட அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை கொடுத்தது. இரு நாடுகளும் தொடா் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழ... மேலும் பார்க்க

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

டெல் அவிவ்/டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெ... மேலும் பார்க்க

நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச் சூடு: மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவா்களை திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்கள் வெளியிடாமல் உரிமை மீறல்: அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்

கொழும்பு: இந்தியா-இலங்கை புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாததை எதிா்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவு... மேலும் பார்க்க

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்... மேலும் பார்க்க

காங்கோ வெள்ளத்தில் 77 போ் உயிரிழப்பு

கின்ஷாசா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் ஈக்வடியுா் மாகாணத்தில் மட்டும் மூன்று படகுகள் தும்பா ஏரியி... மேலும் பார்க்க